sriknath

தைபே ஓபன் 2-வது சுற்றில் ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி

தைபே ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

தைபே ஓபன் சூப்பர் 300 பாட்மிண்டன் தொடர் தைபேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத்தரவரிசையில் 61-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சகநாட்டைச் சேத்ந சங்கர் முத்துசாமியை எதிர்த்து விளையாடினார். இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

2-வது சுற்றில் ஸ்ரீகாந்த், மற்றொரு இந்திய வீரரான ஆயுஷ் ஷெட்டியுடன் மோதுகிறார். ஆயுஷ் ஷெட்டி தனது முதல் சுற்றில் 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் உலகத் தரவரிசையில் 13-வது இடத்திலும், ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறியவருமான சீன தைபேவின் லி ஷியா ஹாவோவை தோற்கடித்தார்.

ayush shetty

2023-ம் ஆண்டு தேசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் தருண் மன்னேபள்ளி முதல் சுற்றில் 21-17, 19-21, 21-12 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவைச் சேர்ந்த முகமது ஜக்கி உபைதில்லாவை வீழ்த்தினார்.

அதேவேளையில் மற்றொரு இந்திய இளம் வீரரான மெய்ராபா லுவாங் மைஸ்னம் 21-23, 12-21 என்ற செட் கணக்கில் கனடாவின் பிரையன் யங்கிடம் தோல்வி அடைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-13, 21-17 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த அனுபமா உபாத்யாயாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் சீன தைபேவின் லின் சிஹ் யுன்னுடன் மோதுகிறார் அனுபமா.

மற்றொரு ஆட்டத்தில் அகர்ஷி காஷ்யப் 9-21, 12-21 என்ற நேர் செட்களில் தைபேவின் ஹங் யி-டிங்கிடம் தோல்வியடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top