Kho kho

அல்டிமேட் கோ கோ போட்டியில் சர்வதேச வீரர்கள்

குருகிராம்

அல்டிமேட் கோ கோ சீசன் 3 போட்டிகள் வரும் நவம்பர் 29-ல் தொடங்கும் என கோ கோ இந்திய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இம்முறை சர்வதேச வீரர்கள் முதன்முறையாக கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோ கோ இந்திய கூட்டமைப்பு தலைவர் சுதன்ஷு மிட்டல் கூறும்போது,“ வரவிருக்கும் அல்டிமேட் கோ கோ சீசன் 3-க்கான வீரர்கள் ஏலத்தில் சர்வதேச வீரர்கள் சேர்க்கப்படுவார்கள். அல்டிமேட் கோ கோ சீசன் 3 வரும் நவம்பர் 29-ம் தேதி தொடங்குகிறது.

முதல் முறையாக சர்வதேச வீரர்கள் கலந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம் துணிச்சலான நடவடிக்கையை எடுப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த நடவடிக்கை போட்டியின் தரத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தியாவை கோ கோ-வின் உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிக்கிறது” என்றார்.

அல்டிமேட் கோ கோ சீசன் 1-ல் ஒடிசா ஜாகர்னட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2023–24–ம் ஆண்டு சீசனில் குஜராத் ஜெயண்ட்ஸ் வாகை சூடியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top