ஆடவர் இரட்டையரில் அபிநந்த் ஜோடியும் அசத்தல்
சென்னை:
WTT ஸ்டார் கன்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தகுதி சுற்றுடன் தொடங்கியது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரை ஸ்டூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரின் பிரதான ஸ்பான்சராக இந்தியன்ஆயில் நிறுவனம் உள்ளது.
தகுதி சுற்றின் 2-வது நாளான இன்று கலப்பு இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் ஆகாஷ் பால் – பொய்மண்டீ பைஸ்யா ஜோடி 3-0 (11-7, 11-6, 11-9) என்ற செட் கணக்கில் வைல்டு கார்டு ஜோடியான சகநாட்டைச் சேர்ந்த சார்த் மிஸ்ரா, சாயாலி வானி ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் நுழைந்தது.
மற்ற இந்திய ஜோடிகளான அங்கூர் பட்டாச்சார்ஜி – அய்ஹிகா முகர்ஜி இணை 3-2 (1-11, 11-5, 9-11, 11-7, 11-8) என்ற செட் கணக்கில் அனிர்பன் கோஷ் – ஸ்வஸ்திகா கோஷ் ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் கால்பதித்தது. ஹாங் காங்கின் சான் பால்ட்வின், ஜு செங்ஜு ஜோடி 3-1 (11-5, 11-8, 7-11, 11-7) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஃபின் லூ, மின்ஹ்யுங் ஜீ ஜோடியை தோற்கடித்து பிரதான சுற்றுக்கு முன்னேறியது.

ஆடவர் இரட்டையர் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் அபிநந்த் பிரதிவாதி, ப்ரீயேஷ் சுரேஷ் ஜோடி 3-0 (11-3, 11-4, 11-4) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் தனிஷ் பெண்ட்சே, அர்மான் தலமால் ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றில் நுழைந்தது. இதில் அபிநத்த் சென்னையை சேர்ந்தவர். இதேபோன்று இந்தியாவின் அங்கூர் பட்டாச்சார்ஜி, பாயாஸ் ஜெயின் ஜோடி 3-1 (12-10, 11-2, 14-16, 11-6) என்ற செட் கணக்கில் இத்தாலியின் ஜான் ஓய்போட், கார்லோ ரோஸ் ஜோடியை தோற்கடித்தது.
மகளிர் இரட்டையர் பிரிவு தகுதி சுற்றில் கொரியாவின் ஷின் யூ-பின், ரியு ஹன்னா ஜோடி 3-0 (11-3, 11-1, 11-5) என்ற செட் கணக்கில் இந்தியாவின் தியா பிரம்மச்சாரி, அஞ்சலி ரோகில்லா ஜோடியை வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறியது. சீன தைபேவின் ஹுவாங் யி-ஹுவா, ஹுவாங் யி-ஜி ஜோடி 3-0 (11-4, 11-2, 11-5) என்ற செட் கணக்கில் இந்தியாவின் தனிஷா கொடேச்சா, சயாலி வானி ஜோடியை தோற்கடித்து பிரதான சுற்றில் நுழைந்தது.
இந்தியாவின் நித்யா மணி, ராதா பிரியா கோயல் ஜோடி 3-1 (11-9, 11-9, 10-12, 11-6) என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஜெனிபர் வர்க்கீஸ், திவ்யான்ஷி பவுமிக் ஜோடியை தோற்கடித்து பிரதான சுற்றில் கால்பதித்தது. மற்றொரு இந்திய ஜோடியான யாஷினி சிவசங்கர், செலினா செல்வகுமார் ஜோடி 0-3 (3-11, 5-11, 4-11) என்ற செட் கணக்கில் ஹாங் காங்கின் காங் ட்ஸ்லாம் லாம், லீ ஹோய் மேன் ஜோடியிடம் தோல்வியடைந்தது . இதில் நித்யா மணி, ராதா பிரியா கோயல், யாஷினி சிவசங்கர், செலினா செல்வகுமார் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் ஆவர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு தகுதி சுற்றின் 3-வது ஆட்டத்தில் முதல் நிலை வீரரான இத்தாலியின் நியகோல் ஸ்தோயனோவ், வைல்டு கார்டு வீரரான இந்தியாவின் பிரியனுஜ் பட்டாச்சார்யா 3-0 (11-6, 11-2, 11-6) என்ற செட் கணக்கிலும், ஹாங் காங்கின் ஹோ குவான் கிட் 3-0 (11-9, 11-6, 11-8) என்ற செட் கணக்கில் இந்தியாவின் அக்னிவ் கோஹாயையும் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் திவ்யான்ஷி பௌமிக் 3-1 (8-11, 11-7, 11-8, 11-4) என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த நிகத் பானுவையும், பொய்மண்டீ பைஸ்யா 3-1 (12-10, 9-11, 11-6, 13-11) என்ற செட் கணக்கில் நந்தினி சாஹாவையும் வீழ்த்தி பிரதான சுற்றில் கால்பதித்தனர்.
மகளிர் இரட்டையர் பிரிவில் லக்கிலாசர் அடிப்படையில் இந்தியாவின் தனிஷா கொடேச்சா – சாயாலி வானி ஜோடியும், ஜெனிபர் வர்க்கீஸ் – திவ்யான்ஷி பௌமிக் ஜோடியும் பிரதான சுற்றுக்கு முன்னேறின.