ஆம்ஸ்டெல்வீன்
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் புரோ லீக் தொடரில் இந்திய அணி நேற்று அர்ஜெண்டினாவுடன் மோதியது. நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீன் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. ஐரோப்பிய லெக்கில் இந்திய அணி தொடர்ச்சியாக 3- வது தோல்வியை சந்தித்துள்ளது. ஏற்கெனவே நெதர்லாந்திடம் 2 ஆட்டங்களில் தோல்வி கண்டிருந்தது.
அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 12 மற்றும் 33-வது நிமிடங்களில் கோல் அடித்தார். மேலும் 42-வது நிமிடத்தில் அபிஷேக் ஒரு கோல் அடித்தார். அர்ஜெண்டினா அணி தரப்பில் மத்தியாஸ் ரே (3-வது நிமிடம்), லூகாஸ் மார்டினெஸ் (17-வது நிமிடம்), சாண்டியாகோ டராசோனா (34-வது நிமிடம்) மற்றும் லூசியோ மெண்டஸ் (46-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.