ரொசாரியோ
இந்தியா, உருகுவே, அர்ஜெண்டினா, சிலி ஆகிய 4 நாடுகள் கலந்து கொண்டுள்ள மகளிர் ஜூனியர் ஹாக்கி தொடர் அர்ஜெண்டினாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண்டினாவுடன் மோதியது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
அர்ஜெண்டினா அணி சார்பில் மிலாக்ரோஸ் டெல் வாலே 10-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்திய அ ணதரப்பில் 44-வது நிமிடத்தில் கணிகா கோல் அடித்து அசத்தினார். போட்டி டிராவில் முடிவடைந்ததால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெனால்டி ஷூட்அவுட்டில் இந்திய அணியின் கோல்கீப்பரான கேப்டன் நிதி அற்புதமாக செயல்பட்டு 4 முறை அர்ஜெண்டினா அணியின் கோல் அடிக்கும் வாய்ப்பை முறியடித்தார். இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 30-ம் தேதி சிலியுடன் மோதுகிறது.