axar 5

லக்னோவை மடக்கியது எப்படி.. மனம் திறக்கும் அக்சர் படேல் !

லக்னோ

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லக்னோ அணியை 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 159 ரன்களுக்கு மட்டுப்படுத்தினர் டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள்.

அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 33 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 53 ரன்களும் மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் விளாசினர்.

நிகோலஸ் பூரன் 5 பந்துகளில் 9 ரன்களும், அப்துல் சமத்8 பந்துகளிலும் 2 ரன்களும் சேர்த்து வெளியேறினர். இதன் பின்னர் களமிறங்கிய டேவிட் மில்லர் 15 பந்துகளில், 14 ரன்களும் ஆயுஷ் பதோனி 21 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர்.

axar 6

ரிஷப் பந்த் கடைசி 2 பந்துகள் மீதமிருக்கையில் களமிறங்கி 2 பந்துகளிலும் ரன்கள் ஏதும் சேர்க்காமல் போல்டானார். டெல்லி அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் 4 ஓவர்களை வீசி 33 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

160 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரரான அபிஷேக் போரெல் 36 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசினார்.

மற்றொரு தொடக்க வீரரான கருண் நாயர் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர்கள் இருவரும் மார்க்ரம் பந்தில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் கேப்டன் அக்சர் படேல் 20 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 34 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டெல்லி அணிக்கு 6-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் தொடர்கிறது. போட்டி முடிவடைந்ததும் டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது:

பந்துவீச்சில் நாங்கள் தொடங்கிய விதம் சிறப்பானது. விக்கெட்கள் கைப்பற்றவில்லை என்றாலும் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தோம். ஒரு கட்டத்தில் 2 விக்கெட்களை விரைவாக கைப்பற்றிய பின்னர் எங்களுக்கு உத்வேகம் கிடைத்தது.

அணியில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டு 160 ரன்களுக்குள் லக்னோ அணியை கட்டுப்படுத்தினார்கள். சிறிய அளவில் எனக்கு காயம் இருந்ததால் கடந்த ஆட்டங்களில் அதிகளவில் பந்துவீசவில்லை. ஆனால் இந்த ஆட்டத்தில் நான் நல்ல ரிதத்தில் இருந்ததால் தொடக்க ஓவர்களை வீசினேன்.

பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தினேன். எப்போதெல்லாம் பந்து வீச்சில் நான் மாற்றங்களை கொண்டுவந்தேனோ அப்போதெல்லாம் அவர்களும் சிறப்பாக செயல்பட்டனர்.

நான் எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய களமிறங்குகிறேனோ அப்போதெல்லாம் எனது பலத்திற்கு ஏற்ப விளையாடுவேன், நான் எந்த நிலையில் பேட்டிங் செய்கிறேன் என்பது முக்கியமல்ல, நான் பந்துவீச்சாளரை குறிவைத்து செயல்படுகிறேனோ, அப்போதெல்லாம் வெற்றியைப் பெற்று வருகிறேன், எங்களது பீல்டிங்கை கொஞ்சம் மேம்படுத்த வேண்டும்.

இவ்வாறு அக்சர் படேல் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top