fifa qualified teams

ஃபிபா உலகக் கோப்பையில் உஸ்பெகிஸ்தான், ஜோர்டான்

சியோல்

உஸ்பெகிஸ்தான், ஜோர்டான் அணிகள் முதன்முறையாக ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுவதற்கான தகுதியை பெற்றுள்ளன. அதேவேளையில் தென் கொரியா 11-வது முறையாக தொடர்ச்சியாக பங்கேற்க உள்ளது.

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் 48 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான தகுதி சுற்று பல்வேறு கண்டங்களில் நடைபெற்று வருகின்றன.

இதில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கான தகுதி சுற்றின் 3-வது கட்டத்தில் நேற்று முன்தினம் இரவு அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் – உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது.

இதன் மூலம் இன்னும் ஒரு ஆட்டம் மீதமுள்ள நிலையில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்து உலகக் கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறுவதை உறுதி செய்துள்ளது உஸ்பெகிஸ்தான். அந்த அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.

இதே பிரிவில் 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் அணிகள் தகுதி சுற்றின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி உள்ளன. ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் கொரியா 2-0 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வீழ்த்தி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது. இதே பிரிவில் இடம் பெற்றுள்ள ஜோர்டான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை வீழ்த்தி முதன் முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top